Wednesday, July 16, 2008

போதும் போதும் நண்பா!
நீ கொண்ட சோகங்கள் போதும்
கழிந்து விட்டன கடுமையான நாட்கள் இனி
உன் பாதையில் இனிமையான பூக்கள் ...

நீ கொண்ட துயரங்கள் போதும் - இனி
சந்தோஷம் உன் வாழ்வில் நிரம்பட்டும்!

நீ சந்தித்த தொல்லைகள் போதும் - அவை
அனைத்தும் தொலை தூரம் ஒழியட்டும்!

நீ அடைந்த ஏமாற்றங்கள் போதும் - உன்
கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்!

நீ கேட்ட சுடுசொற்கள் போதும் - இனி
மனதினில் உற்சாகம் பொங்கட்டும்!

நீ தவித்த தவிப்புகள் போதும் - இனி
வெற்றிகள் உன் பக்கம் குவியட்டும்!

நீ உதிர்த்த கண்ணீர்த்துளிகள் போதும் - இனி
ஒளிவெள்ளம் உன் கண்களில் ஒளிரட்டும்!

நீ மனதில் கொண்ட சுமைகள் போதும் - இனி
சுதந்திரமாய் உன் செயல்கள் இருக்கட்டும்!

நீ உணர்ந்த வலிகள் போதும் - இனி
வசந்தமாய் உன் வாழ்வு மலரட்டும்!

இனி எல்லாம் சுகமே! - இவ்வரிகள்
என்றுமே உன் செவியில் ஒலிக்கட்டும்!

இனிய மாற்றங்கள் இவை
நிரந்தரமாய் உன்னிடமே வசிக்கட்டும்!

kirukkal by,
Sakthi

No comments: