Thursday, March 12, 2009

என்றும் வானவில்


சுட்டெரிக்கும் வெயில் - ஆனாலும்

கண்டேன் வானவில்

மனதோடு மழைக்காலம்!

Friday, January 23, 2009

சமர்ப்பணம்!



பாலைவனத்தில் முதல் மழைத்துளி ....

மண்ணின் இறுக்கம் தளர்ந்தது 
நெகிழ்ந்தது .. கரைந்தது ....

சிறுதுளி பெருமழையாய் மாறியதில் 
வண்ண மலர் பூந்தோட்டம் !!!!

மண்ணிற்குச் செய்த அற்புதத்தினை 
மழைத்துளி அறிந்தது , உணர்ந்தது ...

அங்கு விளைந்த சந்தோஷப் பூக்களைக் 
கண்டு ரசித்து ஆரவாரம் இன்றி, 
அமைதியாய் மண்ணுள் 
கலந்துவிட்டது மழைத்துளி!

இனி, எண்ணிலடங்கா மலர்ச்செடிகள் 
அம்மண்ணிலே தோன்றலாம் …

அவை அனைத்தும், 

அந்த முதல் துளிக்கே சமர்ப்பணம்! 

Thursday, January 22, 2009

என்ன தவம் செய்தனை!!!!



என்ன தவம் செய்தனை யசோதா?

இங்கிவனை நான் பெறவே

என்ன தவம் செய்தனை?


இன்று நான் யசோதா!

தேவகிக்கு நன்றி!